பயன்படாத பொதுகழிப்பிடம்

Update: 2023-07-19 11:25 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த வெங்காய நூரில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடம் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்தது. பின்னர் அதை பராமரித்தனர். ஆனால் சரி செய்த கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை வரை திறக்கப்படவில்லை. இதனால் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிப்பிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்