கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2023-07-19 09:06 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். குழந்தைகளை கூட வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்