சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-07-16 16:47 GMT

பெரியகுளம் வடகரை மில்லர் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கால்வாயில் தேங்கிய கழிவுநீர் வெளியே சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்