கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

Update: 2022-07-24 11:45 GMT

உளுந்தூர்பேட்டை குமரன் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அங்கு மேற்கொண்டு பணிகள் நடைபெறவில்லை. பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலைப் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கிடப்பில் போடப்பட்ட கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்