மூடப்படாத கழிவுநீர் தொட்டிகள்

Update: 2023-07-12 12:38 GMT
திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு தென்னூர் வெள்ளாளர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் தொட்டிகள் புதிதாக கடந்த 7 நாட்களுக்கு அமைக்கப்பட்டது. இந்த தொட்டிகள் இன்று வரை முறையாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் கழிவுநீர் தொட்டிகளில் நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் தொட்டிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்