சாக்கடை கால்வாய் தூரவாரப்படுமா?

Update: 2023-07-12 12:03 GMT


கும்பகோணம் காமராஜர் 6-வது தெருவில் திறந்தவெளி சாக்கடை உள்ளது. சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதிபொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும் செய்திகள்