கடலூர் மஞ்சக்குப்பம் 11-வது வார்டு பாஷ்யம் நகரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், மாநகர மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதன் காரணமாக மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது. எனவே கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?