தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-09 13:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆலையின் அருகில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. மேலும் இங்கு தங்கி நிற்கும் கழிவுநீர் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் கலந்து விடுகிறது. இதனால் தண்ணீரில் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்