சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-07-05 13:06 GMT

திருச்சி மாநகராட்சி, கே.கே.நகர் செல்லும் சாத்தனூர் சாலையில் ரங்க நகர் 3-வது தெருவின் அருகில் சாலையோரத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. கடந்த 6 மாதங்களாக இதே நிலை நீடித்து வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றுபரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்