தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-02 17:01 GMT
கடலூர் துறைமுகம் 42-வது வார்டு பகுதி கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்