ஏரியில் கலக்கும் கழிவுநீர்

Update: 2023-07-02 16:55 GMT
தியாகதுருகத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. மேலும் கோழி இறைச்சிக்கழிவுகளும் இதில் கொட்டப்படுகிறது. இதனால் ஏரிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதோடு, கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்