தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2023-07-02 16:55 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோடாமல் குளம்போல் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்