சாக்கடை வசதி தேவை

Update: 2023-06-28 16:41 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த அறமத்தாம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடி, குடியிருப்புகளில் புகுந்துவிடுகிறது. சிலர் சாலையோரம் பள்ளம் வெட்டி, சாக்கடை நீரை தேக்கி வைத்துள்ளனர். அதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-விஜய், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்