சென்னை, திரு.வி.க. நகர் மண்டலம், அருந்ததி நகரில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் குழந்தைகள், வயதானோர் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.