கழிவுநீரை அகற்ற வேண்டும்

Update: 2023-06-25 17:04 GMT

சேலம் சூரமங்கலத்தில் இருந்து போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, காட்டூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என தினசரி 1000-க்கும் மேற்பட்டோர் போடிநாயக்கன்பட்டி ரெயில்வே தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றனர். தரைப்பாலம் அமைத்த பின்னரும் சூரமங்கலத்தில் இருந்து ரெயில்வே தரை பாலம் வரை இணைப்பு சாலை போடப்படவில்லை. மேலும் அங்கு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கழிவுநீர் வழியாக சென்று வரும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்