பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னை பஸ் நிற்கும் இடத்திற்கு தெற்குப் பகுதியில் காலியிடம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.