பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

Update: 2023-06-21 17:17 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநில பஸ்களும், பல்வேறு தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. இங்கு ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடம் அருகில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்