பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் கிராம ஊராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட விளாமுத்தூர் வடக்கு தெருவான காலனி தெருவில் கழிவுநீர், மழைநீர் செல்ல வடிகால் வசதி அமைத்தரப்படவில்லை. இதனால் வீடுகளின் முன்பு கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தூர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.