சுகாதார சீர்கேடு

Update: 2023-06-21 12:28 GMT

திங்கள்நகரில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையின் நுழைவு வாசல் பகுதியில் சாலையோரத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் தேங்காமல் வடிந்தேட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்