குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-06-07 17:41 GMT
விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் குடலை புரட்டும் அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதியில் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்