சுகாதார சீர்கேடு

Update: 2023-06-07 14:08 GMT
நாமக்கல் பஸ்நிலையம் எதிரே உள்ள பிரதான சாலையின் ஓரமாக கடந்த சில நாட்களாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கமலாலய குளத்தில் இருந்து வரும் தண்ணீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்