சென்னை வேளச்சேரி நியூ செக்ரடேரியட் காலனி 2-வது தெரு நுழைவு வாயில் அருகே இருக்கும் மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தாக காட்சி தருகிறது. இரவில் இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் தடுக்கி விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மழைநீர் வடிகால்வாயை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?