தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்கள்

Update: 2023-06-04 15:58 GMT

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வருவதுடன் தூர்வாரப்படும் கழிவுகள் உடனே அகற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்