திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஐஸ்வர்யாநகர், அங்காளபரமேஸ்வரிநகர், பாலக்குட்டை பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அதை தவிர்க்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.