தேங்கி நிற்கும் கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-05-24 11:45 GMT

கரூர் மாவட்டம், பாலத்துறை வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. புகழூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளுக்காக பாசனத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக வாய்க்கால் நெடுவிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீர் புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. தற்போது புகழூர் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் கழிவுநீர் பாலத்துறை பாலம் அருகே தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் மிதக்கின்றன. மேலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுவட்டார பதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள், கடைக்காரர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்