கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2023-05-17 10:45 GMT

அரியலூர் தேரடி அருகே கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்