கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2023-05-17 09:16 GMT

கோத்தகிரி பொட்டுலைன் குடியிருப்பு பகுதிக்கு அருகே செங்குத்தான பகுதியில் இருந்து கழிவுநீர் கால்வாய் ஒன்று செல்கின்றது. இந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர மழை நேரத்தில் தாழ்வான குடியிருப்புகளுக்குள் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்