அகற்றப்படாத கழிவுகள்

Update: 2023-05-14 13:23 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பாலத்துறை வாய்காலில் அதிக அளவில் குப்பைக் கழிவுகள் தேங்கி இருந்ததால் இந்த வழியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் கிடந்த கழிவுகளை அள்ளி சாலையோரம் வைத்துள்ளனர். இதனால் இந்த சாலை வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்