பாதாள சாக்கடை வசதி வேண்டும்

Update: 2023-05-10 13:14 GMT
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம், அம்மாகுளம் 3-வது தெரு மேற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள சில வீடுகளுக்கு இன்னும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்