கடும் துர்நாற்றம்

Update: 2023-05-03 09:30 GMT

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்றது. அப்போது சாக்கடை கால்வாய் உடைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் சீரமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது. மேலும் மழை பெய்யும்போது, மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீதியெங்கும் ஓடுகிறது. இதில் குப்பைகளும் அடங்கும். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாக்கடை கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்