தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-30 15:08 GMT

பவானி அருகே உள்ள ஒரிச்சேரி ஊராட்சி இந்திரா நகரில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஓடி ரோட்டோரம் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே இந்திரா நகர் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்