முறையான வடிகால் அவசியம்

Update: 2023-04-26 18:22 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே சித்தப்பட்டினம் ஊராட்சியில் உள்ள பெரியாயி கோவில் தெருவில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் தூர்வாரப்படாததாலும், முறையான வடிகால் இல்லாததாலும் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாருவதோடு, முறையான வடிகால் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்