தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-23 16:57 GMT

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி புதுமேட்டூர் ரோஜாநகர் பகுதியில் முறையாக சாக்கடை வடிகால் கட்டப்படவில்லை. பாதி கட்டி முடிக்கப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல் ஓரிடத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது. உடனே சாக்கடை வடிகாலை முழுமையாக கட்டவும், கழிவுநீர் தேங்குவதையும் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்