மூடப்படாத கால்வாய்

Update: 2023-04-23 09:35 GMT

கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரே சாக்கடை கால்வாய் சரிவர மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன், அந்த சாக்கடை கால்வாயை சரியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்