விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை- செங்கோட்டை நெடுஞ்சாலையில் முறையான வாருகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.