சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-04-09 17:22 GMT

நாமக்கல் மோகனூர் சாலையில் ஆசிரியர் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியின் பெயர் பலகை அருகே கழிவுநீர் சாலையின் ஓரமாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் போன்ற நோய்களால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்