சிமெண்டு சிலாப் சேதம்

Update: 2023-04-09 15:27 GMT

முருங்கப்பாக்கம் தக்காதோப்பு பகுதியில் சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்துபோய் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்