சுகாதார சீர்கேடு

Update: 2023-03-29 13:21 GMT

நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலையையும், பொய்யேரிக்கரை சாலையையும் இணைக்கும் வகையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை ஓரத்தில் சாக்கடை வடிகால் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் அங்குள்ள அரசுக்கு சொந்தமான குடோன் அருகில் சாக்கடை தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்