கடும் துர்நாற்றம்

Update: 2023-03-29 09:43 GMT

கோவை மாதம்பட்டி பேரூர் மெயின்ேராட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் கருங்கற்களை வரிசையாக போட்டு வைத்துள்ளனர். இதன் காரணமாக அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி வருகிறது. மேலும் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் ஓடுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சாக்கடை கால்வாயில் போட்டு வைத்துள்ள கருங்கற்களை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்