சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-22 12:46 GMT
கரூர் மாவட்டம் சேமங்கி எம்ஜிஆர் நகர் அருகே பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் பழுதடைந்துள்ளதால் அதை பெண்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியை ச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்