வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-03-22 10:56 GMT


தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி சாலை கனக சபை நகரில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்