திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பராய்த்துறை ஊராட்சி பெரியார் நகரில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாய கழிவறை தண்ணீர் வசதி இல்லாததால் தற்போது பயன்பாட்டின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதோடு, அரசின் நிதியும் வீணாகி வருகிறது. எனவே, சமுதாய கழிவறை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.