சாக்கடையில் அடைப்பு

Update: 2023-03-22 10:11 GMT


கோவை மாநகராட்சி 80-வது வார்டு கெம்பட்டி காலனியில் உள்ள சாக்கடையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்ேவறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்