தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-19 14:33 GMT

மயிலாடுதுறை நகரில் ஐயாறப்பர் கோவில் மேலவீதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீழ் வெளியேறி செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பகுதியை மூக்கை மூடியபடி கடந்து செல்கின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்