கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-15 18:24 GMT
புவனகிரி ஒன்றியம் வடதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் குடியிருப்புகளில் வழிந்தோடுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாருவது அவசியம்.

மேலும் செய்திகள்