கழிவுநீர் வடிகால் அமைக்கப்படுமா?

Update: 2023-03-15 14:52 GMT
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அடுத்த நிலாநகர் கிழக்கு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பலர் குடியிருந்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்து கழிவுநீர் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்