சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

Update: 2023-03-12 11:54 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் பகுதியில் நீடூர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழி உள்ளது. இந்த குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்