சுகாதார சீர்கேடு

Update: 2023-03-12 07:56 GMT

கொட்டாரம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியற்றப்படும் கழிவுநீரானது அருகில் உள்ள அகஸ்தியர் புதுகுளம் மற்றும் அண்ணாவி குளங்களில் கலக்கிறது. இதனால், இந்த குளங்களில் உள்ள தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, விவசாயிகள் நலன்கருதி குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்