கடும் துர்நாற்றம்

Update: 2023-03-08 11:44 GMT

கோவை பாப்பநாயக்கன்பாளையம் நியூ ஸ்கீம் மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. இதனால் வாரக்கணக்கில் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நடந்து செல்பவர் மீது வாகனங்கள் கழிவுநீர் பீய்ச்சியடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்