சாலையில் வெள்ளம்போல் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-03-05 17:09 GMT
ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பழைய காவல் நிலையம் மற்றும் ஆண்டிமடம் சாலையில் குயவர் வீதி, விநாயகர் கோயில் தெருக்களில் இருபுறமும் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதிகள் செய்யப்படாததால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வெள்ளம் போல் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்